இலங்கையில் இதுவரை 992 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதில் 559 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், 424 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 149 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.