அமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 50இலட்சத்தைக் கடந்தது.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அமெரிக்காவில் 50இலட்சத்து 32ஆயிரத்து 179பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல் நாடாக விளங்கும் அமெரிக்காவில், இதுவரை ஒரு இலட்சத்து 62ஆயிரத்து 804பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 58ஆயிரத்து 611பேர் பாதிக்கப்பட்டதோடு, ஆயிரத்து 203பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது அங்குள்ள மருத்துவமனைகளில் 22இலட்சத்து 92ஆயிரத்து 707பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 18ஆயிரத்து 296பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும், இதுவரை 25இலட்சத்து 76ஆயிரத்து 668பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.