ஜனாதிபதி கோத்தாபய ராஜபபக்ஷ முன்னிலையில் இன்றைய தினம் 28 அமைச்சர்கள் மற்றும் 39 இராஜாங்க அமைச்சர்கள் சத்திரியப்பிரமாணம் செய்துகொண்டுள் ளனர்.
இந்நிலையில், ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களுக்கு இன்று பதவியேற்ற அமைச்சரவையில் ஆறு அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நான்கும் மற்றும் இரண்டு இராஜாங்க அமைச்சுக்களும் கிடைக்கப் பெற்றுள்ளது.
அதன் படி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று மூன்று அமைச்சர் பதவிகளை பொறுப்பேற்றார்.
அத்துடன் குறித்த அமைச்சர்களிடையே பிரிக்கப் பட்டுள்ள பிரிவு பின்வருமாறு.
புதிய அமைச்சரவை அமைச்சர்கள்
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ -பாதுகாப்பு அமைச்சு
மஹிந்த ராஜபக்ஷ – நிதி,புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள், நகர அபிவிருத்தி மற்றும் மற்றும் வீடமைப்பு
சமல் ராஜபக்ஷ- நீர்ப்பாசன அமைச்சு
நாமல் ராஜபக்ஷ- இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு
இராஜாங்க அமைச்சுக்கள்
சமல் ராஜபக்ஷ – உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்.
சஷீந்திர ராஜபக்ஷ- நெல் மற்றும் தானியங்கள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங் காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழிநுட்ப கமத் தொழில்.