அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் 13 வயதான சிறுவனை தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவு உட்படுத்தியதுடன், தனது காதலனாக இருக்குமாறும் வற்புறுத்திய யுவதி ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோர்ட்னி லீ என்ற இந்த யுவதி தனது முகவரியை மாற்றியமை தொடர்பில் அறிவிக்காததாலும், பாலியல் குற்றவாளி பதிவு செய்யாதமையினாலும் அவருக்கு ஒரே தடவையில் அனுபவிக்க 10 மற்றும் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தமக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய, கோர்ட்னி லீயின் வீட்டுக்கு சென்ற பொலிஸாருக்கு, சிறுவனுக்கும் யுவதிக்கும் இடையிலான உறவுபற்றி சந்தேகம் எழுந்துள்ளது.
அதன்போது, சிறுவனை அவர் தனது காதலன் எனக்கூறியுள்ளார். இந்நிலையில், லீயை கடந்த 2015 ஆம் ஆண்டு பொலிஸார் கைது செய்தனர்.
சம்பவத்தின்போது, லீ 19 வயது யுவதியாக இருந்துள்ள நிலையில் குற்றத்தையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
இது குறித்து வழக்கு விசாரணைக்கு வந்தபோது தான் ஒருவகை உளநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக லீ குறையுள்ளார். அதனையடுத்து நீதிபதி அவருக்கு 10 வருட தகுதிகாண்கால தண்டனையை அறிவித்தார்.
எனினும், அவர் பொலிஸாருக்கு அறிவிக்காமல் தனது இருப்பிடத்தை மாற்றியதற்காக மீண்டும் 2017 இல் கைது செய்யப்பட்டார்.
மேற்படி 10 வருட சிறைத்தண்டனைக் காலத்தில், அவர் விளக்கமறியலில் இருந்த 1250 நாட்கள் கழிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.