ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Sunday, February 5
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    ஆரோக்கியம்

    கொரோனா கட்டுப்பாட்டில் பெருகும் ‘செல்போன் ஆபாச உரையாடல்’

    AdminBy AdminAugust 22, 2020No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

     

    உணவு, உடைக்கான தேடுதல் வேட்கையைவிட, பாலியல் ரீதியான தேடுதலுக்கு மனித மனம் அதிகம் ஏங்குகிறது.

    அந்த வகையில் தற்போது ஆண்களையும், பெண்களையும் அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது, ‘செல்போன் செக்ஸ் உரையாடல்’.

    கொரோனா தொடர்புடைய ஊரடங்கு உத்தரவால் மக்கள் அனைவரும் வீட்டிலே முடங்கிக் கிடக்கிறார்கள்.

    இந்த நிலையில் ஆபாச படங்கள் அதிக அளவில் பார்க்கப்படுவதாக போலீசார் எச்சரிக்கிறார்கள். அதோடு செல்போன் ஆபாச உரையாடலும் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.

    செல்போன்கள் இப்போது அதனை உபயோகிப்பவரின் கைக்குள்ளும், அவரது வீட்டு படுக்கை அறைக்குள்ளும் எல்லாவற்றையும் கொண்டு வந்து காட்சிகளாகவும், ஒலிகளாகவும் கொடுத்துக்கொண்டிருக்கின்றன.

     

    இதனால் நிறைய நல்ல விஷயங்கள் நடந்துகொண்டிருந்தாலும், கெட்ட விஷயங்கள் ஒன்றிரண்டு ஆங்காங்கே நடந்து, சம்பந்தப்பட்ட நபர்களை ஆழ்ந்த சோகத்திற்குள் அமுக்கிவிடுகிறது.

    செல்போன் மூலம் இணையதளங்கள் வழியாக பாலியல் காட்சிகளை பார்த்து ரசித்தவர்கள், இப்போது பெண்களின் குரல்களில் வசியம் கொண்டு, அவர்களது கிளர்ச்சியூட்டும் பேச்சுக்கு அடிமையாகி, பணத்தை இழப்பதோடு, மிகுந்த மன உளைச்சலுக்கும் உள்ளாகிறார்கள்.

    மனித மனம் விந்தையானது. அது ஏக்கங்களும், எதிர்பார்ப்புகளும் நிறைந்தது. உணவு, உடைக்கான தேடுதல் வேட்கையைவிட, பாலியல் ரீதியான தேடுதலுக்கு மனித மனம் அதிகம் ஏங்குகிறது.

    புதிது புதிதாக எந்த வழியில் அது கிடைத்தாலும் அனுபவித்துப் பார்க்கத் துடிக்கிறது. அந்த வகையில் தற்போது ஆண்களையும், பெண்களையும் அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது, ‘செல்போன் செக்ஸ் உரையாடல்’.

    இந்தியாவை பொறுத்தவரையில் கணவனும்-மனைவியும் பாலியல் பற்றி அதிகம் பேசுவதில்லை. தாம்பத்தியம் வைத்துக்கொள்ளும் மனநிலைக்கு அவர்கள் வரும்போது, கிளர்ச்சியூட்டும் உரையாடல் அவர்களுக்குள் நின்றுவிடுகிறது.

    செயல்தான் நடக்கிறது. அதனால் பாலியல் ரீதியான பேச்சுக்கு அவர்கள் மனம் அதிகம் ஏங்குகிறது. அந்த ஏக்கம்தான் ‘போன் செக்ஸ்’ வியாபாரிகளுக்கு மூலதனமாகிவிடுகிறது.

    அழகான பெண்களிடம் பேச தயங்கும் ஆண்கள் இப்போதும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்.

    இப்படி நேரடியாக பேச தைரியமில்லாத ஆண்களுக்குள், அழகான பெண்களிடம் அந்தரங்கமான விஷயங்களை பேசவேண்டும் என்ற ஏக்கம் இருந்துகொண்டே இருக்கிறது.

    அப்படி ஏங்கிக்கொண்டிருக்கும் ஒரு ஆணிடம், ஒரு பெண் பாலியல் ரீதியாக போனில் பேசும்போது, அதன் மூலம் தன் ஏக்கத்தை தீர்த்துக்கொள்ள அவர் விரும்புகிறார்.

    அதுவும் தனது படுக்கை அறையில் யாருக்கும் கேட்காத நிலையில், மற்றவர்கள் யாராலும் தொந்தரவு தர முடியாத நிலையில் அந்த ‘பேச்சு இன்பம்’ கிடைக்கும்போது, ‘அதையும் அனுபவித்து பார்த்துவிடலாம்’ என்ற எண்ணம் உருவாகிவிடுகிறது.

    எதிர்முனையில் பேசும் பெண்ணின் பேச்சு அந்த ஆணை கிளர்ச்சியடைய வைத்துவிடுகிறது. உலக அளவில் பெண்களைவிட, ஆண்களே இதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

    கொரோனா காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை மளமளவென உயர்ந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    போன் மூலமான பேச்சு இன்பத்தில் அளவற்ற ஆர்வம் ஏற்படும்போது, அவர்களுக்கு நேரடியான பாலியல் உறவில் நாட்டம் குறையும்.

    எல்லையற்ற ‘பேச்சு இன்பம்’ பின்பு ஒருவித மனநோயாக மாறும். பேச்சு இன்பம் மனதை பாதிக்கும் நிலைக்கு செல்லும்போது மதுவுக்கு அடிமையானவர்களைப் போன்று, புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களைப் போன்று, இதற்கும் அடிமையாகி விடுவார்கள்.

    பின்பு அதில் இருந்து அவர்களை மீள வைப்பது கடினம். பேச்சு இன்பத்தால் மனதளவில் பாதிக்கப்படுகிறவர்களுக்கு குற்றஉணர்வு, சுயபச்சாதாபம், தூக்கமின்மை, எதிலும் ஆர்வமின்மை, அளவுக்கு அதிகமான சோர்வு, சக மனிதர்கள் மீது எரிச்சல் போன்றவை அதிகம் ஏற்படும். பொருளாதார நெருக்கடியும் அவர்களுக்கு தோன்றும்.

    அன்பு, நட்பு, காதல் போன்றவற்றில் நம்பிக்கை இல்லாதவர்களும், தன்னம்பிக்கை இல்லாதவர்களும், நேருக்கு நேர் பெண்களை பார்த்து பேச கூச்சம் கொண்டவர்களும், அதிக மன அழுத்தத்திற்கு உள்ளானவர்களும், பேச்சு இன்ப செயல்பாடுகளுக்கு எளிதில் அடிமையாகிவிடுவார்கள்.

    வசதிபடைத்த முதியோர்களான ஆண்கள் இந்த விஷயத்தில் மிக கவனமாக இருக்கவேண்டும். ஏன்என்றால் இந்த பலவீனத்தை அவர்கள் வெளிப்படுத்திவிட்டால், இதை பயன்படுத்தி பெண்கள் அவர்கள் வாழ்க்கையில் புகுந்துவிடுவார்கள்.

    அந்தரங்கமான பேச்சுக்களை அவர்கள் ஆதாரமாக்கி ‘பிளாக்மெயில்’ செய்யும் சம்பவங்கள் நிறைய நடந்திருக்கின்றன.

    போன் செக்ஸ்சில் யாரும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. அப்படியே ஈடுபட்டிருந்தாலும் விரைவாக அதில் இருந்து மீளும் வழியைத் தேடவேண்டும்.

    மன உளைச்சல் ஏற்பட்டிருக்கும் இந்த கொரோனா பீதிகாலகட்டத்தில் அவர்கள் தனிமையில் இருப்பதை தவிர்க்கவேண்டும்.

    குடும்பத்தினரோடு சேர்ந்து விளையாடி மகிழவேண்டும். குடும்பத்தினரோடு மகிழ்ச்சியை கொண்டாடுகிறவர்கள், ‘பேச்சு இன்பத்துக்கு’ அடிமையாக மாட்டார்கள்.

    Post Views: 410

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    ஆண்களே! உங்க மனைவி கள்ள உறவில் ஈடுபடுவதற்கு இதுதான் முக்கியமான காரணமாம்… ஷாக் ஆகாம படிங்க!

    January 31, 2023

    முகப்பரு ஏன் வருகிறது? அதை எப்படி தவிர்ப்பது?

    January 4, 2023

    ஆர்த்ரிட்டீஸ் நோய் ஏன் ஏற்படுகிறது? பாதிப்பை குறைப்பது எப்படி?

    December 18, 2022

    Leave A Reply Cancel Reply

    August 2020
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
    « Jul   Sep »
    Advertisement
    Latest News

    வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு

    February 4, 2023

    இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி; போலீசில் இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்

    February 4, 2023

    அதிமுக: உச்ச நீதிமன்ற உத்தரவில் வந்த `செக்’; வாபஸ் முடிவில் பன்னீர்செல்வம் தரப்பு? – முழுப் பின்னணி

    February 4, 2023

    “ஏழு ஸ்வரங்களுக்குள்…” எத்தனையோ மொழிகளில் பாடிய வாணி ஜெயராம்

    February 4, 2023

    தெமட்டகொடையில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலை

    February 4, 2023
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி; போலீசில் இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்
    • அதிமுக: உச்ச நீதிமன்ற உத்தரவில் வந்த `செக்’; வாபஸ் முடிவில் பன்னீர்செல்வம் தரப்பு? – முழுப் பின்னணி
    • “ஏழு ஸ்வரங்களுக்குள்…” எத்தனையோ மொழிகளில் பாடிய வாணி ஜெயராம்
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version