புதுவையில் பேரக்குழந்தைகளின் ஆசைக்காக பெண் ஒருவர் வளர்ப்பு பூனைக்கு வளைகாப்பு நடத்தியுள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
புதுவை மூலக்குளம் பெரம்பை ரோட்டை சேர்ந்தவர் வசந்தா. இவர் செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். வீட்டில் பூனை ஒன்றையும் அவர் வளர்த்து வருகிறார்.
அந்த பூனை கர்ப்பமாக இருந்துள்ளது. இந்த நிலையில் டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் வளைகாப்பு ஒன்று நடப்பதை பார்த்த வசந்தாவின் பேரக்குழந்தைகள் அதேபோன்ற நிகழ்ச்சியை நமது வீட்டிலும் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து கர்ப்பமாக இருக்கும் பூனைக்கு வளைகாப்பு நடத்த வசந்தா திட்டமிட்டார். இதற்காக அக்கம்பக்கத்தினரை அழைத்து பூனைக்கு வளைகாப்பு நடத்தினார். பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவதை போன்றே மாலை அணிவித்து வளையல் அணிவித்து திருஷ்டி சுற்றி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. வளைகாப்பு நடத்தப்பட்ட பூனைக்குட்டி நேற்று முன்தினம் 4 குட்டிகளை ஈன்றன என்பது குறிப்பிடத்தக்கது.