யாழ்.பருத்தித்துறை வீதியில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் இந்தக் குடும்பப் பெண் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டிருந்தார்.

கட்டப்பிராய் பகுதி ஊடாக பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கிளைச் செலுத்த முற்பட்டபோது பிரதான வீதியில் வேகமாகப் பயணித்துக் கொண்டிருந்த பஸ் மோதியதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர் கல்வியங்காடு ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான சுபேசன் பவானி (வயது- 33) எனத் தெரியவந்துள்ளது

Share.
Leave A Reply

Exit mobile version