மாத்தறையில் ஹோட்டலொன்றில் தங்கியிருந்தரஸ்ய பிரஜை கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதை தொடர்ந்துஅவருடன்தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.
மத்தல சர்வதேச விமானநிலையத்துக்கு சமீபத்தில் வந்த ரஸ்ய விமானமொன்றின் பணியாளர் ஒருவர் ஹோட்டலொன்றிலிருந்து அம்பாந்தோட்டை வைத்தியாசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட நபர் ஏனைய விமானப்பணியாளர்களுடன் மாத்தறையில் உள்ள ஹோட்டலொன்றில் தங்கியிருந்தார் என தெரிவித்துள்ள அதிகாரிகள் முதலில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவர் பாதிக்கப்படவில்லை என தெரியவந்தது என தெரிவித்துள்ளனர்.
எனினும் இரண்டாவது சோதனையின் போதுஅவர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து ஹோட்டல் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், ரஸ்ய பிரஜையுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.