கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மற்றொருவரும் இன்றிரவு மரணமடைந்துள்ளார். இலங்கையில் கொரோனாவினால் மரணமடைந்த 16 ஆவது நபர் இவராவார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த 70 வயதான வயோதிபர் ஒருவரே இவ்வாறு மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மரணமடைந்தவர் கொழும்பு, கொம்பனித் தெருவைச் சேர்ந்தவராவார்.