பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடைய 18 பேர் பிசிஆர் பரிசோதனை செய்ய மறுத்து கழிவு நீர் கால்வாய் வழியாகத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பேலியகொட மீன் சந்தையுடன் சம்பந்தப்பட்ட நபர்களிடம் முதல் கட்டமாக நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் 49 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து பேலியகொட மீன் சந்தை இணைப்பாளர்களில் பி.சி.ஆர்.பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங் களுக்குச் செல்ல மறுத்த 18 பேர் சந்தைக்கு அருகில் உள்ள கழிவு நீர் கால்வாயில் குதித்து அடுத்த கரைக்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிய வருகிறது.
இவ்வாறு தப்பியோடியவர்களைக் கைதுசெய்ய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
எனினும் தப்பியோடியோரில் சிலர் தமது தவறை உணர்ந்துள்ள தாகக் கூறி மீண்டும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை தப்பிச் சென்றவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு
அடிமையானவர்கள் எனவும் கூறப்படுகிறது.