கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் உறவினர்களால் பொறுப்பேற்கப்படாமல் காவல்துறையினரின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களை உடனடியாக தகனம் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளதாவது,
கொரோனா தொற்றினால் உயிரிழந்த நிலையில் அவர்களின் உறவினர்களால் சவப்பெட்டிகள் வாங்கி கொடுக்க முடியாமல் மற்றும் பொறுப்பேற்காத சடலங்கள் காவல்துறை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து அவ்வாறான பூதவுடல்களை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி, அரசாங்கத்தின் செலவில் தகனம் செய்யுமாறு ஜனாதிபதி உரிய தரப்பிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.