பொதுச்சுகாதார பரிசோதகராக பாவனை செய்து ஏராளமான திருட்டுகளை யாழ்ப்பாணத்தில் அரங்கேற்றி வந்த பெண் ஒருவர் தொண்டமானாறு பகுதியில் வைத்து நேற்று(12) பிரதேச வாசிகளால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
குறித்த பெண் பொதுச்சுகாதார பரிசோதகராக பாவனை செய்து, மழையின்போது பல்வேறு கிருமிகள் வீட்டினுள் நுழைந்துள்ளதாகவும் கொரோனா வைரஸ் இருப்பதாகவும் கூறி வீட்டிலுள்ளோரை வெளியேற்றிவிட்டு இவர் உள்நுழைந்து திருட்டில் ஈடுபட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.