இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 255ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இறுதியாக பதிவான மரணங்களின் விபரங்கள் வருமாறு,
கிரிபத்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 90 வயதுடைய பெண்ணொருவரும் கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண்ணொருவரும் நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதுடைய ஆண்ணொருவரும் கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண்ணொருவரும் இவ்வாறு இறுதியாக உயிரிழந்துள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை மாலை வரை 683 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 51 ஆயிரத்தை கடந்துள்ளது.
மொத்த தொற்றாளர்களில் 44 259 பேர் குணமடைந்துள்ளதோடு , 6709 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.