பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்றிரவு 7.00 மணியளவில் பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பெருமாள் பார்த்தீபன் ஊறணியிலுள்ள அவரது விடுதியில் தங்கியிருந்தபோது விடுதியில் உள்நுழைந்த குழுவினர் அவர் மீது வாள் மற்றும் பொல்லால் தலையில் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.