உழைப்பின் கௌரவத்தை பாதுகாக்கும் மற்றும் திறமையான சமுதாயத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விரைவான வளர்ச்சியை அடைவதற்கும், குறுகிய காலத்தில் எதிர்பார்க்கப்படும் பொருளாதார இலக்குகளை அடைவதற்கும் தேசிய கல்வி கொள்கை ஒன்று ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அனைத்து பல்கலைக்கழகங்களையும் ஸ்மார்ட் கற்றல் பல்கலைக்கழகங்களாக மாற்றுவதன் மூலம் எதிர்காலத்தில் அதிக தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை உயர் கல்வியில் சிறந்து விளங்க முன்னுரிமை அளிப்பதை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.