விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்து, அமெரிக்காவில் வேலை கிடைத்து, சென்னை பெண்ணை திருமணம் செய்துகொண்ட இளைஞர் தற்போது வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“மேட்ரிமோனி மூலம் எனது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்தனர். அப்போது விழுப்புரம் முத்தையா நகரை சேர்ந்த மோகன் என்பவரின் மகன் வசந்தன் (33) என்பவர் வரன் பார்க்கப்பட்டது.
பின்னர், கடந்த 2016ம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. கணவர் வசந்தன் அமெரிக்காவில் இன்ஜினியராக வேலை செய்து வந்ததால் அவர்கள் கேட்ட வரதட்சணை அனைத்தும் எனது பெற்றோர் கொடுத்தனர்.
இதனால் நாங்கள் திருமணம் நடந்த நாள் முதல் இருவரும் ஒற்றுமையாக இல்லை. இதனால் எங்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
பிறகு இருவரும் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தோம்.
அதன்படி கடந்த டிசம்பர் மாதம் எங்களுக்கு அமெரிக்க நீதிமன்றம் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது. அதை தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து சென்னை வந்துவிட்டேன். எனது வாழ்க்கை தற்போது கேள்வி குறியாக உள்ளது.
எனவே, அதிக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய எனது கணவர் வசந்தன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
திருமணமான முதல் நாளிலிருந்தே வரதட்சணை கொடுமை இருந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் வசந்தன் மீது வரதட்சணை வழக்கை போலீசார் பதிவு செய்தனர்.
அதனை தொடர்ந்து, நேற்று விமானம் மூலம் சென்னைக்கு வந்த வசந்தனை விமான நிலையத்தில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.