திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் சீமெந்து லொறியில் மோதுண்டு 65 வயதுடைய உப்பு வியாபாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை பச்சிலை சந்திக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே குறித்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மூதுரை சேர்ந்த 65 வயதுடைய சித்திக் என்ற குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது அவரை முந்திசெல்ல முயன்ற சீமெந்து லொறியின் பின் சக்கரத்தில் சிக்குண்டு பலியாகியாகியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர் .
இதையடுத்து சம்பவம் இடம்பெற்ற பச்சிலைசந்திக்கு விரைந்த மூதூர் பொலிஸார் லொறியின் சாரதியை கைதுசெய்து மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.