ஒரே நாடு ஒரே இனம் என்ற கோஷம் எழுப்பியவாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவினர் யாழ்ப்பாணத்தில் இலங்கை சுதந்திர தின பேரணியை நடத்தினர்.
இந்தப் பேரணியின் நிறைவில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜெயசேகர பங்கேற்று யாழ்ப்பாணம் பொதுநூலக முகப்பில் விளக்கேற்றிவைத்தார்.
இந்த பேரணிக்கு பொலிஸார் எத்தகைய தடையையும் ஏற்படுத்தவில்லை.
யாழ் பண்ணை சுற்றுவட்டத்தில் ஆரம்பமான பேரணி கோட்டையை சுற்றி ஏ-9 விதிச் சந்தியில் ஊடாக கேகேஎஸ் வீதியில் பயணித்து சத்திரச்சந்தியூடாக வைத்தியசாலை வீதியால் பயணித்து மகாத்மா காந்தி வீதியூடாக யாழ்ப்பாணம் பொது நூலகத்தை வந்தடைந்தமை குறிப்பிடதக்கது.