இலங்கையில், இறுதியாக 6 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளது.
இறுதியா பதிவாகிய கொரோனா மரணங்களில் 3 பெண்களும் 3 ஆண்களும் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 83 வயதான பெண்ணொருவர் அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார். ஹபராதுவ பகுதியைச் சேர்ந்த 70 வயதான பெண்ணொருவர், ஐ.டி.எச். வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 77 வயதான ஆண்ணொருவர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 46 வயதான பெண்ணொருவர், அங்கொட ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
கண்டி பகுதியைச் சேர்ந்த 69 வயதான ஆண்ணொருவர், கண்டி போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். நாராங்கொட பகுதியைச் சேர்ந்த 53 வயதான ஆண்ணொருவர், அங்கொட வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
இன்று சனிக்கிழமை 796 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 74,852 ஆக உயர்வடைந்துள்ளது.
இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 67,831 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு 6,637 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்று அறிகுறிகளுடன் சந்தேகத்தினடிப்படையில் 665 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.