கட்டுநாயக்க பிரதேசத்தில் இன்று (14) மாத்திரம் 19 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டிருப்பதாக அப்பகுதி பொதுசுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
அங்குள்ள தொழிற்சாலைகளில் இரண்டில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் அங்குள்ள 50 தொழிற்சாலைகளில் 809 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.