யாழ்ப்பாணம் விமான நிலைய மேம்பாடுகள் மற்றும் அபிவிருத்திகள் குறித்து இந்தியா-இலங்கை இடையே பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அடுத்தவாரமளவில் இந்தப்பேச்சுக்கள் தொடங்கவுள்ளன என தெரியவருகின்றது. விமான நிலையத்தின் வளர்ச்சியில் இந்திய முதலீடு, இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ளல் தொடர்பில் இந்த பேச்சின் போது கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இன்றைய தினம் தமிழ் நாட்டின் தலை நகர் சென்னைக்கு வந்த இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, யாழ்ப்பாணம் விமான நிலையம் குறித்து கருத்து வெளியிட்டார்.
யாழ்ப்பாணம் சென்னைக்கு இடையே விமானப் போக்குவரத்தை ஆரம்பித்தவர்கள் என்ற வகையில் தமது அரசாங்கம் பெருமிதம் கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதுமட்டுமன்றி யாழ்ப்பாணத்துக்கும் மன்னாருக்குமிடையிலான ரயில் போக்குவரத்துப் பாதையின் கட்டுமானப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.