நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 77 ஆயிரத்தை கடந்துள்ளது.
இன்று செவ்வாய்கிழமை இரவு 9.30 மணி வரை 756 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 77 184 ஆக உயர்வடைந்துள்ளது.
இவர்களில் 70 429 பேர் குணமடைந்துள்ளதோடு , 5949 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திங்களன்று பதிவான மரணங்கள்
நேற்று திங்கட்கிழமை 6 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. அதற்கமைய நாட்டில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 403 ஆக உயர்வடைந்துள்ளது.
திவுலன்கடவல பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய பெண்னொருவர் தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் கடந்த 14 ஆம் திகதி கொவிட் நிமோனியா நிலைமையால் உயிரிழந்துள்ளார்.
பல்லேதவின்ன பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய பெண்னொருவர் தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் கடந்த 14 ஆம் திகதி இரத்தம் நஞ்சானமை, கொவிட் நிமோனியா, சிறுநீரக நோய் என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.
ஹங்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய ஆணொருவர் தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் கடந்த 15 ஆம் திகதி புற்று நோய் , கொவிட் நிமோனியா என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.
நுகேகொட பிரதேசத்தை சேர்ந்த 80 வயதுடைய ஆணொருவர் தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் கடந்த 14 ஆம் திகதி கொவிட் நிமோனியா, இரத்தம் நஞ்சானமை, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்டவற்றால் உயிரிழந்துள்ளார்.
வத்தளையை சேர்ந்த 68 வயதுடைய ஆணொருவர் தொம்பே வைத்தியசாலையில் கடந்த 14 ஆம் திகதி கொவிட் நிமோனியா, சிறுநீரக நோய், தீவிர நீரிழிவு நோய் என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.
ஹூன்னஸ்கிரிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 70 வயதுடைய ஆணொருவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெந்று வந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி கொவிட் நிமோனியா , தீவிர சிறுநீரக நோய், இதய நோய் என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.