இவர்களில் 72,566 பேர் குணமடைந்துள்ளதோடு 5, 672 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 617 பேர் தொற்று அறிகுறிகளுடன் சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நேற்று வியாழக்கிழமை 20 வயது யுவதி உள்ளிட்ட 6 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
ரிதிமாலியத்த பிரதேசத்தை சேர்ந்த யுவதி ஒருவர் கஹகொல்ல சிகிச்சை நிலையத்திலிருந்து மஹியங்கனை ஆதார வைத்தியசாலைக்கும் பின்னர் அங்கிருந்து பதுளை பொது வைத்தியசாலைக்கும் மாற்றி அனுப்பபட்டுள்ளதுடன் அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.
தீவிர கொவிட் நிமோனியாவால் சுவாசத் தொகுதி செழிலந்துள்ளமையே இவரது மரணத்திற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் குறித்த யுவதிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு மூன்று நாட்களின் பின்னரே அவர் சிகிச்சை நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
அதனையடுத்து 7 நாட்கள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பி , மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்படவே மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பின்னரே உயிரிழந்ததாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர் சங்க தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.