சுகாதார அதிகாரிகள் தன்னிச்சiயாக முன்னுரிமை பட்டியலை கைவிட்டுள்ளதை தொடர்ந்து அரசாங்கத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்கும் திட்டம் பெரும் குழப்பத்திலும் சர்ச்சையிலும் சிக்குண்டுள்ளது.
அதிகளவு பாதிப்பை எதிர்கொள்பவர்களிற்கே முன்னுரிமை வழங்கவேண்டும் என்ற சர்வதேச நடைமுறைகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மீறியுள்ளார்.
இதன் காரணமாக புதன்கிழமைக்கு பின்னர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் திருப்பி அனுப்பப்படும் நிலையேற்பட்டது இதற்கு பல தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இலங்கையின் தொற்றுநோய் பிரிவு இந்த முன்னுரிமை பட்டியலை கைவிட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை தொடர்ந்து எழுந்த கடும் எதிர்ப்பினை தொடர்ந்து புதிய பட்டியலில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களை உடனடியாக இணைத்துக்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை இந்த முன்னுரிமை பட்டியலை யார் கைவிடதீர்மானித்தது என முன்னாள் தலைமை தொற்றுநோய் நிபுணர் நிஹால் அபெயசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
குறிப்பிட்ட அளவு தடுப்பூசி மருந்துகளே காணப்படுகின்ற நிலையில் இந்த நடவடிக்கை பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது அரசியல்வாதிகளும் அவர்களது கையாட்களும் மருந்துகளை பயன்படுத்திக்கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கொரோனாவைரஸ் தடுபபூசி திட்டம் உயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதை நோக்கமாக கொண்டது என தெரிவித்துள்ள அவர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள இளம் வயதினர் மத்தியிலேயே எவரும் பார்க்க முடியும் என குறிப்பிட்டுள்ளார் முன்னுரிமை பட்டியல் மாற்றப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.