நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை அண்மித்துள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணி வரை 518 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 79 998 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 74 299 பேர் குணமடைந்துள்ளதோடு , 5000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று சனிக்கிழமை மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகின. அதற்கமை மொத்த மரணங்களின் எண்ணிக்கை 435 ஆக உயர்வடைந்துள்ளது.
குருவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய ஆணொருவர் மகரகம ஆதார வைத்தியசாலையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து தேசிய தொற்று நோயியல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட போது அங்கு கடந்த 19 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். சுவாசத்தொகுதி செழிலந்தமை, இரத்தம் நஞ்சானமை, கொவிட் நிமோனியா மற்றும் புற்றுநோய் நிலைமை இவரது மரணத்திற்கான காரணமாகும்.
திஹாரிய பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய ஆணொருவர் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது அங்கு கடந்த 20 ஆம் திகதி கொவிட் நிமோனியா நிலையால் உயிரிழந்துள்ளார்.