வடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட 451 பேரின் பி.சி.ஆர். பரிசோதனையிலேயே ஏழு பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, கொரோனா தொற்று அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட, 81 வயது வயோதிபப் பெண்ணுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதிகள் 15 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஆறு பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மேலும் 150 கைதிகளிடம் இன்று மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாகவும், அவற்றின் பி.சி.ஆர். முடிகள் நாளையே கிடைக்கும் எனவும் மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.