Site icon ilakkiyainfo

யாழ்.மல்லாகத்தில் ஆசிரியர் மீது வாள் வெட்டு

யாழ். மல்லாகம் பகுதியில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் வாள் வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகிப் படுகாயம் அடைந்துள்ளார்.

நேற்று இரவு 9.00 மணியளவில் மல்லாகம் சந்தியை அண்மித்த பகுதியில் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் கொண்ட குழு அவர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

Exit mobile version