யாழ். நகரிலுள்ள கார்கில்ஸ் கட்டிடத் திரையரங்குக்கு கடந்த இரண்டு வாரங்கள் திரைப் படம் பார்ப்பதற்கு வந்தவர்களில் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் உள்ளோரை உடன் தொடர்பு கொள்ளுமாறு வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கேட்டுள்ளார்.
காய்ச்சல், தொண்டை நோ, தடிமன், தும்மல் போன்ற அறிகுறிகள் உள்ளோர் வசிக்கும் பிரதேசத்தைச் சேர்ந்த சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை அல்லது
வடமாகாண சுகாதாரத் திணைக்களத்தின் 24 மணிநேர சேவையான 021 2226666என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு அவர் கேட்டுள்
ளார்.
யாழ்ப்பாணம் கார்கில்ஸ் கட்டிடத் தொகுதியிலுள்ள திரையரங்கில் பணியாற்றும் 7 பேருக்கு கொரோனா தொற்று நேற்று முன்தினம் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து திரையரங்கு தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்நிலையில் இந்தத் திரையரங்குக்கு கடந்த இரண்டு வாரங்களாக வந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்
துள்ளது.