நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்,வர்ணப்பூச்சு வேலை செய்வதற்காக சென்ற ஒருவரால் ஏழு பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
மூன்று வீடுகளில் வர்ணப்பூச்சு வேலை செய்வதற்காக பளை பகுதியிலிருந்து சென்றிருந்த ஒருவர் மூலமே, இவர்களுக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூரில் தொற்று உறுதிசெய்யப்பட்ட இன்னொருவர் ஏற்கெனவே தொற்று உறுதியானவருடன் தொடர்புடையவராவார்.
இதேவேளை, கோண்டாவிலில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபை சாலையில் ஒருவருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர், அங்குள்ள சாரதிப் பயிற்சிப் பாடசாலையில் பணியாற்றுபவர் ஆவார்.