67-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. 2019-ம் ஆண்டில் வெளியான படங்களுக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வருடத்திலும் ஏப்ரல் மாதம் திரைப்பட தேசிய விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும். ஆனால் கடந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக தேசிய விருது அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இதன்படி இன்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதில், பார்த்திபன் இயக்கி, நடித்த ’ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு தேசிய விருது மற்றும் ஒலிப்பதிவு பிரிவுகளில் ஒத்தசெருப்பு படத்திற்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஒலிப்பதிவு பிரிவில் ரசூல் பூக்குட்டிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒத்தசெருப்பு படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அப்படத்தை இயக்கி நடித்த பார்த்திபனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.