மினுவங்கொடை, நில்பனாகொட, ஹுரிகஹமுல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை கடக்க முற்பட்ட ஒருவர் மீது மோதி கவிழ்ந்த போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் எதிரில் வந்த தனிமைப்படுத்தல் செயற்பாட்டிற்காக இராணுவ வீரர்கள் சிலரை அழைத்துச் சென்ற பேருந்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.