வெளிநாடுகளில் இயங்கும் புலம்பெயர் 7 தமிழ் அமைப்புகளுக்கும், 300ற்கும் மேற்பட்ட நபர்களுக்கும் இலங்கையில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு செயலாளரின் கையொப்பத்துடன், பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதியிடப்பட்டு குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழர் பேரவை , அவுஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ், உலகத் தமிழர் பேரவை, கனேடிய தமிழர் தேசிய அவை, தமிழ் இளைஞர் அமைப்பு மற்றும் உலக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆகிய அமைப்புக்கள் தடைசெய்யப்பட்டுள்ளது.
அத்துடன் 300 ற்கும் மேற்பட்ட நபர்களின் பெயர்களும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘1968ம் ஆண்டின் 45ம் இலக்க ஐக்கிய நாடுகள் சபைச் சட்டம் 2012ம் ஆண்டின் 1ம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்கு விதியின் பிரகாரம், பெயர் குறிப்பிட்ட ஆட்களின் நிரலுக்கான திருத்தம்’ என்ற தலைப்பில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
2016 நவம்பர் 9ஆம் திகதிய 1992/25 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பெயர் குறிக்கப்பட்ட ஆட்களின் நிரல் இதில் திருத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இணைப்பில் வர்த்தமானி அறிவித்தலை வாசிக்கலாம்