தாய்லாந்தில், மயங்கி விழுந்த தாய் யானைக்கு அரணாக அதன் குட்டியானை வலம் வந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தாய்லாந்தில் வனப்பகுதியில் தாய் யானையும், ஒரு குட்டி யானையும் உணவைத் தேடி நீண்ட தூரம் நடந்து வந்துள்ளது. அப்போது, திடீரென தாய் யானை மயங்கி விழுந்துள்ளது.
அந்த தாய் யானைக்கு அரணாக குட்டி யானை அங்கும் இங்கும் ஓடி பாதுகாப்பு அளிக்கும் காட்சிகளை அங்கிருந்த வன ஆர்வலர்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.