போக்குவரத்து விதிமுறைகளை மீறினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், ஓட்டோ சாரதி ஒருவருக்கு எதிராக, போக்குவரத்து பொலிஸார், தண்டனை படிவத்தை நிரப்பியுள்ளார்.
அப்போது, அந்த ஓட்டோ சாரதி தன்பக்க நியாயத்தை தெரிவித்துள்ளார். அதேவேளை வீடியோவும் எடுத்துள்ளார்.
அதனை அறிந்துகொண்டு போக்குவரத்து பொலிஸார், ஓட்டோ சாரதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சற்றுநேரத்தில் ஐயையோ அடிக்கிறாங்க, ஐயையோ அடிக்கிறாங்க… என சாரதி சத்தமிடுகின்றார்.
இந்த சம்பவம் எங்கு இடம்பெற்றது என்பது தொடர்பிலான விவரம் வெளியாகவில்லை. எனினும், அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.