ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Tuesday, February 7
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    செய்திகள்

    இலங்கையில் 11 இஸ்லாமியவாத அமைப்புகளுக்கு தடை விதிக்க அனுமதி: ‘இனவாத சிங்கள அமைப்புகளுக்கு தடை இல்லை’

    AdminBy AdminApril 7, 2021No Comments4 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    2019 ஈஸ்டர் தாக்குதலுக்கு பின் இஸ்லாமியவாத அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது

    இனவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமியவாத அமைப்புகளுக்கு தடை விதிக்க இலங்கையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா இதற்கான அனுமதியை வழங்கியதாக சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் இணைப்பு அதிகாரி, அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

    ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளுக்கு அமையவே இந்தத் தடை செய்யப்பட்டிருந்தாலும், அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இனவாதமாக செயற்படும் சிங்கள அமைப்புகள் ஏன் தடை செய்யப்படவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    ஐக்கிய தவ்ஹீத் ஜமாத், சிலோன் தவ்ஹீத் ஜமாத், ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத், அனைத்து இலங்கை தவ்ஹீத் ஜமாத், ஜம்யதுல் அன்சாரி சுன்னதுல் மொஹொமதியா, தாருல் அதர் எட் ஜம் உப் ஆதர், ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவ சங்கம், ஐ.எஸ்.ஐ.எஸ், அல்-கைடா, சேவ் த பர்ல்ஸ் மற்றும் சுபர் முஸ்லிம் ஆகிய அமைப்புக்களுக்கே தடை விதிக்க சட்ட மாஅதிபர் அனுமதி வழங்கியுள்ளார்.

    பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில் ஜனநாயக ரீதியான தங்கள் அமைப்பும் தடைக்கு உள்ளாகியுள்ளதாக இந்தப் பட்டியலில் உள்ள ஓர் அமைப்பு கூறியுள்ளது. தடைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் அந்தத் அமைப்பு கூறுகிறது.

    இலங்கையில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலின் பின்னரான காலப் பகுதியில் இஸ்லாமியவாத அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றது.

    கடந்த காலங்களிலும் முகத்தை முழுமையாக மூடும் வகையிலான ஆடைகளை அணிவதற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார்.

    சரத் வீரசேகர

    அதேபோன்று, இனவாத கொள்கைகளுடன் செயற்படும் மத்ரஸா பாடசாலைகளுக்கும் தடை விதிக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியிருந்தார்.

    இந்த விடயம் உள்நாட்டில் மாத்திரமன்றி, சர்வதேச ரீதியிலும் அதிகளவில் பேசப்பட்டது.

    இவ்வாறான நிலையில், இலங்கைக்குள் மாத்திரமன்றி, வெளிநாடுகளிலும் செயற்படும் இஸ்லாமியவாத அமைப்புகளுக்கு தடை விதிக்க இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இதேவேளை, ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

    நவுபர் மௌலவி மற்றும் ஹஜ்ஜீல் அக்பர் ஆகியோரே, ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் எனவும் அவர் கூறுகிறார்.

    பிரதான சூத்திரதாரியான நவுபர் மௌலவி தற்போது கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

    குறித்த நபர் 2014ம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் கொள்கைகளை இலங்கைக்குள் கொண்டு வந்து, அதனை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
    சஹ்ரான் ஹாஷிம்

    சஹ்ரான் ஹாஷிம்

    2019ம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் தற்கொலை செய்துக்கொண்ட சஹ்ரான் ஹாஷிம், 2016ம் ஆண்டு, நவுபர் மௌலவியின் இனவாத கொள்கைகளுடன் இணைந்து செயற்பட்டுள்ளதாகவும், நவுபர் மௌலவியே, சஹ்ரானுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் சரத் வீரசேகர கூறுகிறார்.

    இதேவேளை, ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய 32 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், 211 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

    இதேவேளை, 75 பேர் தொடர்ந்தும் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கிறார்.
    தடை செய்யப்பட்ட அமைப்புகளின் எதிர்வினை

    பயங்கரவாதத்திற்கு எதிராகவும், தீவிரவாதத்தை அடியோடு இல்லாது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலும் செயற்படும் ஜனநாயக ரீதியான தமது அமைப்பை தடை செய்வதானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தெரிவிக்கிறது.

    சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு, வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமது அமைப்பு உள்ளிட்ட 6 தவ்ஹீத் அமைப்புகளுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.

    சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பானது, 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னரே, பாதுகாப்பு துறைக்கு சஹரான் ஹஷிமின் பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் தகவல்களை வழங்கியதாகவும் அந்த அமைப்பு குறிப்பிடுகின்றது.

    ஈஸ்டர் தாக்குதலின் பின்னரான காலத்தில் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியவற்றின் விசாரணைகளுக்கு தமது அமைப்பு பூரண ஒத்துழைப்புக்களை வழங்கியதாகவும் சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தெரிவிக்கின்றது.

    இந்த விசாரணைகளில் தமது அமைப்பின் கொள்கைகள், செயற்பாடுகள், சமூக பணிகள் உள்ளிட்டவற்றை, ஆதாரங்களுடன் தாம் முன்வைத்திருந்ததாகவும் அந்த அமைப்பு குறிப்பிடுகின்றது.

    இவ்வாறு தமது முழுமையான கொள்கைகளை வெளிப்படுத்தியுள்ள போதிலும், சட்ட மாஅதிபர் இவ்வாறான தீர்மானத்தை எட்டியுள்ளமை, அடிப்படையற்றது என அந்த அமைப்பு, விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய அமைப்புகளை தடை செய்வதற்கு தாம் ஆட்சேபனை கிடையாது எனவும் சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு கூறுகின்றது.

    எனினும், பயங்கரவாதத்திற்கு எதிராக செயற்படும் ஓர் அமைப்பை தடை செய்வதானது, ஜனநாயகத்திற்கு விரோதமானது என அந்த அமைப்பு குறிப்பிடுகின்றது.

    எவ்வாறாயினும், அரசாங்கத்தின் இந்த தீர்மானத்திற்கு எதிராக தாம் நீதிமன்றத்தை நாடி, நியாயத்தை பெற்றுக்கொள்ளவுள்ளதாக சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தெரிவிக்கின்றது.

    இனவாதமாக செயற்படும் சிங்கள அமைப்புகள் தடை செய்யப்படவில்லை?

    ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளுக்கு அமையவே, அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹுமான் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

     

    நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹுமான் (கோப்புப்படம்)

    எனினும், இனவாத கொள்கைகளை கொண்ட பெரும்பான்மை சிங்கள அமைப்புக்களும் இந்த பட்டியலில் காணப்பட்ட போதிலும், அந்த இனவாத அமைப்புகளை தடை செய்யாது, இஸ்லாமிய அமைப்புகளை மாத்திரம் தடை செய்வதானது ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் கூறுகின்றார்.

    இந்த நடவடிக்கையின் ஊடாக, சட்டத்தில் பிரச்னை உள்ளமை தெளிவாகின்றது என அவர் குறிப்பிடுகின்றார்.

    இந்த நாட்டிலுள்ள சட்டம் சிறுபான்மை சமூகத்திற்கு ஒரு விதமாகவும், பெரும்பான்மை மக்களுக்கு வேறொரு விதமாகவும் செயற்படுகின்றது என்பது இதனூடாக உறுதிப்படுத்தப்படுகின்றது என அவர் கூறுகின்றார்.

    இந்த நடவடிக்கையானது, அநீதியான நடவடிக்கை என்பதுடன், எதிர்காலத்தில் இதனூடாக பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

    இதேவேளை, விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவில் சிறுபான்மை சமூகத்தின் பிரசன்னம் கிடையாது என கூறிய அவர், அதனால், ஆணைக்குழுவின் பரிந்துரைகள் எந்தளவிற்கு நியாயமானது என்ற கேள்வி எழுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    பெரும்பான்மை சமூகத்தை வைத்து கொண்டு, அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் ஊடாக, சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை பேசுவதாகவும் முஜுபூர் ரஹுமான் தெரிவிக்கின்றார்.

    இந்த பெரும்பான்மை சிங்கள அதிகாரிகளுக்கு, இஸ்லாமிய கொள்கைகள் எவ்வாறு தெரியும் என அவர் கேள்வி எழுப்பினார்.

    வெள்ளைகாரர்கள், இலங்கை தொடர்பில் தீர்மானங்களை எடுத்ததை போன்றே, தற்போதைய அரசாங்கம் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக தீர்மானங்களை எடுத்து வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹுமான் குறிப்பிடுகின்றார்.

    -பிபிசி தமிழ்-

    11 அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்க சட்டமா அதிபர் அனுமதி

    அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுபடும் இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்க சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதி வழங்கியுள்ளார்.

    இந்த விடயத்தை சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன உறுதிப்படுத்தினார்.

    1. UTJ எனப்படும் ஐக்கிய தௌஹீத் ஜமா -அத்
    2. CTJ எனப்படும் சிலோன் தௌஹீத் ஜமா -அத்
    3. SLTJ எனப்படும் ஶ்ரீலங்கா தௌஹீத் ஜமா -அத்
    4. ACTJ எனப்படும் அகில இலங்கை தௌஹீத் ஜமா -அத்
    5. JSM எனப்படும் ஜமயத்துல் அன்சாரி சுன்னத்துல் மொஹமதியா
    6. தாருள் அதார் @ ஜமியுல் அதார் (Dharul Aadhar @ Jamiul Aadhar)
    7. SLISM எனப்படும் இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம்,
    8.ISIS அமைப்பு,
    9. அல்கைதா (Al-Qaeda),
    10. Save the Pearls அமைப்பு,
    11. Super Muslim அமைப்பு

    ஆகியவற்றுக்கு தடை விதிக்க சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதி வழங்கியுள்ளார்.

    Post Views: 352

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    “ஏழு ஸ்வரங்களுக்குள்…” எத்தனையோ மொழிகளில் பாடிய வாணி ஜெயராம்

    February 4, 2023

    நாளை வடக்கு, கிழக்கில் ஹர்த்தால்.. அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு கறுப்புக் கொடி ஏற்றப்படும்-யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

    February 3, 2023

    13 வது திருத்தத்தை இலங்கை நடைமுறைப்படுத்தவேண்டும் – ஐநா அமர்வில் இந்தியா

    February 1, 2023

    Leave A Reply Cancel Reply

    April 2021
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930  
    « Mar   May »
    Advertisement
    Latest News

    ஜன்னல் சீட்டுக்காக பஸ், ட்ரெயின்ல இல்ல.. Flight -ல நடந்த சண்டை.. முட்டி மோதிக் கொண்ட பெண்கள்!!

    February 7, 2023

    பெட்ரோல் பங்கில் பணத்தை தூக்கி ரோட்டில் வீசிய கார் உரிமையாளர்.. கண்ணீருடன் பொறுக்கி எடுக்கும் பெண் ஊழியர்.. உலகளவில் அதிர்ச்சி சம்பவம்.!

    February 7, 2023

    தமிழ்நாடு: எடப்பாடி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் புதிய திருப்பம்

    February 6, 2023

    சாமியார் தோற்றத்தில் நடிகை தமன்னா…! ரசிகர்கள் ஷாக்…!

    February 6, 2023

    துருக்கி-சிரியா நில நடுக்கம் பலி எண்ணிக்கை 2,300 ஆக உயர்வு…!

    February 6, 2023
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • ஜன்னல் சீட்டுக்காக பஸ், ட்ரெயின்ல இல்ல.. Flight -ல நடந்த சண்டை.. முட்டி மோதிக் கொண்ட பெண்கள்!!
    • பெட்ரோல் பங்கில் பணத்தை தூக்கி ரோட்டில் வீசிய கார் உரிமையாளர்.. கண்ணீருடன் பொறுக்கி எடுக்கும் பெண் ஊழியர்.. உலகளவில் அதிர்ச்சி சம்பவம்.!
    • தமிழ்நாடு: எடப்பாடி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் புதிய திருப்பம்
    • சாமியார் தோற்றத்தில் நடிகை தமன்னா…! ரசிகர்கள் ஷாக்…!
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version