பதுளை – மஹியங்கனை வீதியின் கய்லகொட பகுதியில் மதுபோதையில் சாரதி ஒருவர் செலுத்திய இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்தில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (08) மாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 68 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்களுடன் மோதி நபர் ஒருவர் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.