யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரதேசத்தில் கொள்ளையர்கள் தாக்கியதில் வயோதிபர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.
மீசாலை பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது 3 பேர் கொண்ட திருடர் கூட்டம், முதியவர்கள் தனித்து வசிக்கும் வீட்டிற்குள் நுழைந்துள்ளது.
குறித்த வீட்டில் வசிக்கும் வயோதிப தம்பதியை கட்டி வைத்து, பொருட்கள் இருக்குமிடம் குறித்து சித்திரவதை செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இக் கொடூர சம்பவத்தில் அல்லாரை வீதி மீசாலையை சேர்ந்த 80 வயதுடைய செல்லையா சிவராசா என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த வயோதிபரை கொலை செய்து விட்டு நகைகளையும் கொள்ளை அடித்துக் கொண்டு திருடர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.