அரச வங்கியொன்றின் 70 ஊழியர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
வங்கியின் கொழும்பு, பதுளை, காலி, அம்பலாங்கொடை மற்றும் கேகாலை கிளைகளில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பாரிய கொவிட் கொத்தணிகள் உருவாகும் அபாயம் இருப்பதாக வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
இதேவேளை, பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் புதிதாக 31 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேற்கொள்ளப்பட்ட 130 பி.சி.ஆர் பரிசோதனைகளில் இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
எழுமாற்றாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மற்றும் தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் இவ்வாறு தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.