நேட்டோவின் Dynamic Manta நீர்முழ்கி எதிர்ப்பு யுத்தப் பயிற்சி லோனியன் (Lonian) கடலில் பெப்ருவரி 22 முதல் மார்ச் வரை நடைபெற்றுள்ளது.
அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஸ்பெயின், பெல்ஜியம், துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து கப்பல்கள், நீர்மூழ்கிகள், விமானங்கள் என்பன இந்நிகழ்வில் பங்குபற்றின.
இந்தப் பயிற்சியில் இரண்டு பிரதான பிரிவுகளான அமெரிக்காவின் லொஸ் ஏஞ்செல்ஸ் வகுப்பு அணுசக்கி தாக்குதல் நீர்மூழ்கியும், பிரான்சின் சாள்ஸ் டீ கோல் விமானந்தாங்கி கப்பல் தனது போர்க் குழுவுடனும் இந்தப் பயிற்சியில் பங்குபற்றியதுடன், ஒரு அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கியும் இதில் இணைக்கப்பட்டிருந்தது.
பயிற்சி முடிந்த கையோடு சாள்ஸ் டீ கோல் விமாந்தாங்கி கப்பல் பாரசீக வளைகுடாவுக்குச் சென்றுள்ளது. இந்தப் பயிற்சியில் பங்குபற்றிய இத்தாலி முழுப் பயிற்சியினதும் ‘வரவேற்பு நாடாக’ இருந்துள்ளது.
சிசிலியில் உள்ள கற்றானியா என்ற இடத்திலுள்ள கடற்படை தளத்தையும், கடற்படை ஹெலிகொப்டர் தளத்தையும் இதில் பங்குபற்றிய படைகளுக்கு இத்தாலி ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.
மத்தியதரைக் கடற் பிராந்தியத்தில் சிசிலியில் அமைந்துள்ள அமெரிக்க மற்றும் நேட்டோவின் சிகோனெல்லா விமானத்தளமும், ஒகஸ்ரா தளமும் விநியோகத் தளங்களாகச் செயற்பட்டுள்ளன.
நேட்டோ தெரிவித்த தகவலின்படி இந்தப் பயிற்சியின் நோக்கம், ஐரோப்பாவை பயமுறுத்துகின்ற மத்தியதரைக் கடல் பகுதயிலுள்ள ரஸ்ய நீர்மூழ்கிகளை வேட்டையாடுவதாகும்.
அதேநேரத்தில், அந்திலாந்திக் சமுத்திரத்தில் அமெரிக்காவின் ஐசனோவர் விமாந்தாங்கிக் கப்பலும் அதன் போர்க்குழுவும் பயற்சியில் ஈடுபட்டன. அதற்கு அவர்கள் சொன்ன காரணம், ‘கூட்டாளி நாடுகளுக்கு அமெரிக்க இராணுவ உதவியை வழங்குவதும், கடல்களை சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் வைத்திருப்பதற்குமாகும்’ என்பதே.
இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட நேபிள்ஸ் மற்றும் கெயிற்றா தளங்களில் இருந்து செயற்படும் அமெரிக்காவின் ஆறாவது கடற்படை, முன்பு நேபிஸ்சில் இருந்த நேட்டோ கட்டளையகத்தின் தலைமை அதிகாரி அட்மிரல் ஃபொக்கோ வகுத்த யுத்ததந்திரத்தின்படியே செயற்பட்டன.
இந்தப் பயற்சிக்கு அவர்கள் சொன்ன காரணம், ரஸ்யா அத்திலாந்திக் சமுத்திரத்தின் இரு கரைகளையும் இணைக்கும் தமது நீர்மூழ்கிகளையும் கப்பல்களையும் மூழ்கடிப்பதன் மூலம் ஐரோப்பாவை அமெரிக்காவிலிருந்து தனிமைப்படுத்திவிடும் என்பதாகும்.
இரண்டு உலக யுத்தங்களுக்கும், பனிப்போருக்கும் பின்னர், ‘அத்திலாந்திக்கின் நான்காவது யுத்தத்துக்காக’ நேட்டோ கட்டாயமாகத் தயாராக இருக்க வேண்டும் என அவர் வாதிடுகிறார்.
இதேநேரத்தில், ‘அமெரிக்கா தனது கூட்டாளி நாடுகளுக்கு உதவுவதற்கு வலிமையுள்ளதாக இருக்பதைக் காட்டுவதற்காக’ அமெரிக்கா டெக்சாசில் உள்ள தனது யுத்ததந்திர பி-51 குண்டு வீச்சு விமானங்களை, நோர்வேயின் எஃப் – 35 யுத்த விமானங்களுடன் இணைந்து ரஸ்ய எல்லைக்கு அருகிலுள்ள நோர்வே பகுதிக்கு நகர்த்தியுள்ளது.
Dynamic Manta 2020
ஐரோப்பாவிலும் அதனை அண்டிய கடல் பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள் அமெரிக்க கடற்படை ஜெனரல் ரொட் வோல்ரேர்ஸ் தலைமையினால் வழிநடத்தப்படுகிறது.
இவர் அமெரிக்காவின் ஐரோப்பிய கட்டளையகத்தினதும், அதேவேளையில் நேட்டோவினதும் ஐரோப்பாவினதும் ஒன்றிணைந்த மேல்நிலை கட்டளையகத்தின் தலைவராகவும் இருக்கின்றார். இந்தப் பதவியை அமெரிக்க ஜெனரல் ஒருவரே வகிப்பது வழமை.
இந்த இராணுவ நடவடிக்கைகள் எல்லாம் உண்மையை மறைத்து ‘ரஸ்ய ஆக்கிரமிப்பிலிருந்து ஐரோப்பாவை பாதுகாத்தல்’ எனக் காட்டுவதற்கான நோக்கமாகும்.
நேட்டோ ஐரோப்பாவில் ரஸ்ய எல்லைக்கருகில் அணுவாயுத தளங்கள் உட்பட தனது படைகளை விஸ்தரித்து வருகிறது. பெப்ருவரி 26இல் ஐரோப்பிய சபையில் உரையாற்றிய நேட்டோவின் செயலாளர் நாயகம் ஸ்ரொல்ற்ரென்பேர்க், ‘பெருந்தொற்று நோய் ஏற்படுவதற்கு முன்னர் நாம் எதிர்நோக்கிய பயமுறுத்தல் நிலை இன்னமும் இருக்கிறது’ எனக் கூறி, முதலில் ‘ரஸ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள்’ எனக் குறிப்பிட்டதுடன், அதன் பின்னணியில் ‘சீனாவின் எழுச்சி’ ஆபத்தானது எனக் குறிப்பிட்டார்.
பின்னர் அவர், அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் தூரஅத்திலாந்திக் தொடர்பை வலுப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார். புதிய பைடன் நிர்வாகம் ஐரோப்பாவுடனும் நேட்டோவுடனும் உயர்மட்டத்தில் கூட்டாகச் செயல்பட மிகவும் விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 90 சத வீதமானோர் (27 ஐரோப்பிய யூனியன் நாடுகளில் 21 நாடுகள் உட்பட) நேட்டோ நாடுகளில் வாழ்வதாக அவர் குறிப்பிட்டார்.
‘பந்தோபஸ்து மற்றும் பாதுகாப்பு விடயங்களில் நேட்டோவுடனும், புதிய பைடன் நிர்வாகத்துடனும் நெருக்கமாக ஒத்துழைப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ளதாக’ ஐரோப்பிய சபை மீண்டும் உறுதிப்படுத்தியது. ‘
ஐரோப்பிய யூனியனை இராணுவ ரீதியாகப் பலப்படுத்த வேண்டும்’ எனவும் அது கூறியது. இத்தாலிய பிரதம மந்திரி மாரியோ ட்றாகி (Mario Draghi) தனது உரையில், இந்த பலப்படுத்தும் நடவடிக்கை கட்டாயமாக நேட்டோ கட்டமைப்புக்குள் பூர்த்தி செய்யப்படுவதாக இருப்பதுடன், அமெரிகாவுடன் இணைந்ததாகவும் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
எனவே, ஐரோப்பிய யூனியனின் இந்த இராணுவ வலுவூட்டல் என்பது, நிச்சயமாக நேட்டோவையும் பூர்த்தி செய்வதாக இருப்பதுடன், அமெரிக்காவின் யுத்ததந்திரத்தையும் பூர்த்தி செய்வதாக இருக்கப் போகின்றது.
இந்த யுத்ததந்திரம் உண்மையில் ரஸ்யாவுடனான பதட்டத்தை ஐரோப்பாவில் அதிகரிப்பதுடன், ஐரோப்பிய யூனியனில் அமெரிக்காவின் செல்வாக்கை அதிகரிப்பதாகவும் இருக்கும்.
இந்த ஆபத்தான, செலவுமிக்க விளையாட்டு, ரஸ்யாவை இராணுவ ரீதியாகப் பலப்படுத்துவதை நோக்கித் தள்ளிவிடும். 2020இல் முழு நெருக்கடிக்கு மத்தியிலும் இத்தாலியின் இராணுவ செலவீனம் ஆஸ்திரேலியாவை முந்திக்கொண்டு உலக அளவில் 13ஆவது நிலையிலிருந்து 12ஆவது நிலைக்குச் சென்றுள்ளது.
Report this ad
(இந்தக் கட்டுரையை இத்தாலிய இடதுசாரிப் பத்திரிகையான il Manifesto இல் எழுதிய Manlio Dinucci உலகமயமாக்கல் ஆய்வு நிலையத்தின் ஒரு இணை ஆய்வாளர் ஆவார்)