யாழ்ப்பாணம், கொடிகாமம் பாலாவி காட்டுப்பகுதியில் இராணுவத்தினர் இன்று (22.04.2021) மாலை 6.30 மணியளவில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது, சட்டவிரோத மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை மறித்துள்ளார்கள்.
இராணுவத்தினரின் கட்டளையை மீறி அவர்கள் உழவு இயந்திரத்தில் தப்பி செல்ல முற்பட்ட போது வாகனத்தின் டயர்களை இலக்கு வைத்து இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டினால் டயர் காற்றுப் போக உழவு இயந்திரத்தில் பயணித்த மூவர் வாகனத்தை கைவிட்டுவிட்டு காட்டுக்குள் பாய்ந்து தப்பி சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் உழவு இயந்திரத்தை மீட்டதுடன் , தப்பிச் சென்ற மூவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.