உன்னிச்சை 3 ஆம் கட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை நிதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள காயங்குடா ஆற்றுப்பகுதியில் நேற்று மாலை 3 மணியளவில் சட்டவிரோதமாக ஆற்று மண்ணை ஏற்றிக் கொண்டு வேகமாக உழவு இயந்திரம் பயணித்தபோது எதிரே ஒரு மோட்டர்சைக்கிளில் இருவர் சென்ற நிலையில் இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மோட்டர்சைக்கிலில் பின் இருந்து சென்றவர் மோட்டர்சைக்கிளை விட்டு உழவு இயந்திரத்துக்குள் பாய்ந்ததையடுத்து உழவு இயந்திரத்தில் சிக்கி படுகாயமடைந்ததுள்ளார்
இதனையடுத்து படுகாயமடைந்தவரை ஊழவு இயந்திரத்தில் தூக்கி ஏற்றிக் கொண்டு மண்யாட்டிற்கு கொண்டுசென்று அங்கு சுமார் அரைமணித்தியாலம் வைத்துவிட்டு பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்த நிலையில் மேலுமொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.