– 7 ஆண்கள், 1 பெண்
– வயதுகள்: 62, 45, 53, 56, 76, 48, 73, 57
– இடங்கள்: பொல்கொல்ல, ஹெட்டிபொல, மத்துகம, நுகேகொடை, பன்னிபிட்டிய, அம்பகஹ பெலஸ்ஸ, வத்தளை, ஸ்ரீ ஜயவர்தனபுர;
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 8 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இன்று (27) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 647 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 8 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 655 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
இவ்வாறு மரணமடைந்தவர்களில் இருவர் இன்றும் (27), இருவர் நேற்றும் (26), இருவர் நேற்று முன்தினமும் (25), ஏப்ரல் 22, 23ஆம் திகதிகளில் தலா ஒவ்வொருவரும் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
648ஆவது மரணம்
பொல்கொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த, 62 வயதான ஆண் ஒருவர், கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மரணமடைந்துள்ளார். இவரது மரணம் கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா, என அறிவிக்கப்பட்டுள்ளது.
649ஆவது மரணம்
ஹெட்டிபொல பிரதேசத்தைச் சேர்ந்த, 45 வயதான ஆண் ஒருவர், குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று முன்தினம் (25) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா, என அறிவிக்கப்பட்டுள்ளது.
650ஆவது மரணம்
மத்துகமை பிரதேசத்தைச் சேர்ந்த, 53 வயதான ஆண் ஒருவர், களுத்துறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று (26) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா மற்றும் குருதி விஷமடைவினால் ஏற்பட்ட அவையவங்கள் செயலிழப்பு, என அறிவிக்கப்பட்டுள்ளது.
651ஆவது மரணம்
நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்த, 56 வயதான ஆண் ஒருவர், IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று (26) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 காரணமான சுவாச செயற்பாடு செயலிழப்பு, குருதி விஷமடைவு, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இழைப்பு, என அறிவிக்கப்பட்டுள்ளது.
652ஆவது மரணம்
பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த, 76 வயதான ஆண் ஒருவர், ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று (26) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா, என அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பகஹ பெலஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த, 48 வயதான ஆண் ஒருவர், தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனி, என அறிவிக்கப்பட்டுள்ளது.
654ஆவது மரணம்
வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த, 73 வயதான பெண் ஒருவர், ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, பிம்புர ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் இன்று (27) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா, என அறிவிக்கப்பட்டுள்ளது.
655ஆவது மரணம்
ஸ்ரீ ஜயவர்தனபுர பிரதேசத்தைச் சேர்ந்த, 57 வயதான ஆண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.
இவரது மரணம் இன்று (27) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், குருதி விஷமடைவு மற்றும் உக்கிரகொவிட்-19 நியூமோனியா நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.