எகிப்து நாட்டில் தொடர்ந்து ஆச்சரியமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும்.
இந்நிலையில் எகிப்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நூற்றுக்கும் மேற்பட்ட கல்லறைகள் மற்றும் பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் வெளிவந்த தகவலின்படி, நைல் நதிப்படுகையில் இருக்கும் கோயும் எல் குல்கான் (Koum el-Khuulgan) என்ற இடத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
அப்போது தான் ஒரு பெரிய பாறையில் வெட்டி அமைக்கப்பட்ட கல்லறைகளைக் கண்டுள்ளனர். மேலும் அதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 110 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்தக் கல்லறையின் காலம் கிமு 6000 முதல் கிமு 3150-க்கு இடைப்பட்ட காலமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கல்லறைகள் ஒவவொன்றும் தனித்தனி வடிவமைப்பில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதேபோல் சில நாட்களுக்கு முன்பு எகிப்தின் 3000 ஆண்டுகள் பழமையான தங்க நகரம் ஒன்று கணடுபிடிக்கப்பட்டது.
அந்நாட்டில் பிரமிடுகளே மிக மிக புகழ்பெற்றவை என்பது நம் அனைவருக்கும் தெரியும். குறிப்பாக பாறைகளால் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய கட்டிடங்களில் இப்போது கூட மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுக்கிறது.
மேலும் பிரமிடுகளின் மேற்பரப்புகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும், அதுவும் தொலைவிலிருந்து பார்த்தால் கூட பளபளப்புடன் தெரியும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக 2008-ம் ஆண்டுப்படி, இதுவரை 135 பிரமிடுகள் எகிப்தில் கண்டறியப்பட்டுள்ளன. எகிப்து நாட்டின் தொல்லியில் துறை நிபுணர் ஸாஹி ஹவாஸ் என்பவர் மற்றும் எகிப்பித்தின் தொல்பொருள் ஆய்வு நிறுவனத்துடன் சேர்ந்து தங்க நகரம் என்ற இடத்தை ஆய்வு நடத்தி வந்தனர்.
இது அனைவரையம் ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கிறது. எகிப்து வரலாற்றிலேயே மிகவும் முக்கிய கண்டுபிடிப்பாக கருதப்படும் தங்க நகரம் மிக முக்கியமானது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த இடத்தில் மிகவும் ஆச்சரியமான பொருட்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.