கிளிநொச்சி பாரதிபுரம் கிராமத்தில் 37 வயதுடைய இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் நேற்றிரவு (04.05.2021) இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு ஊழியராக பணிபுரியும் குறித்த நபர் வழமை போன்று நேற்றிரவு கடமை முடிந்து வீடு திரும்பிய அவர் இரவு உணவை முடித்துவிட்டு நித்திரைக்குச் சென்றுவிட்டார்.
பின்னர் அதிகாலை தாயார் சென்று பார்வையிட்ட போதே தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
37 வயதான அவர் வயோதிப தாயாருடன் வசித்து வந்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன் திருமணம் செய்த இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் சமீபகாலமாக தற்கொலை செய்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.