கடும் மழையுடன் கூடிய வானிலையால் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.
546 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கடும் மழையுடன் கூடிய வானிலையால் ஏழு மாவட்டங்களை சேர்ந்த 11,074 குடும்பங்களின் 42,252 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேகாலை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல் மற்றும் காலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.