Site icon ilakkiyainfo

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 981 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்று (17) இதுவரையில் 2,433 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 145,179 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,307 பேர் இன்று (17) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 119,629 ஆக அதிகரித்துள்ளது.

Exit mobile version