வடக்கு மாகாணத்தில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமை இதுவேயாகும்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 976 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

அவர்களில் 117 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 66 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 33 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 7 பேரும் வவுனியா மாவட்டத்தில் 6 பேரும் மன்னார் மாவட்டத்தில் 5 பேரும் என 117 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் 61 பேரும் முல்லைத்தீவு வைத்தியசாலையில் 2 பேரும் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் 3 பேரும் என 66 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலையில் 5 பேருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தரும்புரம் வைத்தியசாலையில் 2 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் 5 பேருக்கும் செட்டிகுளம் வைத்தியசாலையில் ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 5 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 7 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் சாவகச்சேரி வைத்தியசாலையில் மூவருக்கும் சங்கானை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 9 பேருக்கும், சாவாகச்சரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 8 பேருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய், நல்லூர் மற்றும் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் தலா ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் 960 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட உடனடி அன்டிஜன் பரிசோதனையில் 261 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்