வீதி வபத்துகள் காரணமாக இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 6 பேர் ஏற்கனவே இடம்பெற்ற விபத்துக்களில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பதோடு , ஏனைய நால்வரும் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்துக்களில் உயிரிந்துள்ளனர் என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிள் , முச்சக்கர வண்டி உள்ளிட்டவற்றில் பயணிப்போரும் , பாதசாரதிகளுமே வீதி விபத்துகளினால் பெரிதும் பாதிப்படைகின்றனர். எனவே இவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
மதுபோதை மற்றும் போதைப் பொருட்களை பாவனையுடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கண்காணிப்பதற்காக விசேட சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இது தொடர்பில் கைதி செய்யப்படும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.