தமிழகத்தில் கொரோனாத் தொற்றுப் பரவலானது நாளுக்கு நாள் தீவிரமடைந்துகொண்டு வருகின்றது.
இதன் காரணமாக அரசியல் தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் தடுப்பூசியை செலுத்துவதன் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் நடிகை நயன்தாரா, தனது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் ஜோடியாக வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.