இன்று ஐவர்; ஏப்ரல் 23 – மே 22 வரை 27 மரணங்கள்
– 14 ஆண்கள், 18 பெண்கள்
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 32 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இன்று (23) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 1,178 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 32 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 1,210 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
இன்றையதினம் 5 பேரும், ஏப்ரல் 23 – மே 22 வரை 27 பேரும் மரணங்கள் நிகழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 23 – ஒருவர்
மே 17 – ஒருவர்
மே 18 – ஒருவர்
மே 19 – 04 பேர்
மே 20 – 10 பேர்
மே 21 – 05 பேர்
மே 22 – 05 பேர்
மே 23 – 05 பேர்
இவ்வாறு மரணமடைந்த 32 பேரில் 14 பேர் ஆண்கள், 18 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.